இராமர்

கல்யாணராமன்

வில் ஒன்று சொல் ஒன்று இல் ஒன்று என்றவனேகல்யாண ராமனே காத்தருள் புரிவாயே நல்லோர் நினைவிலே நாளும் இருப்பவனேஎல்லோர்க்கும் எளியவனே ஏரியை காத்தவனே பரசுராமர் கர்வம் பங்கம் செய்தவனேபரதனுக்கிரங்கியே பாதுகை தந்தவனேமரகத வண்ணனே மனங்கவர் சுந்தரனேமரங்கள் ஏழினையே சரத்தாலே துளைத்தவனே

கிருஷ்ணர்

நந்த குமாரன்

கடல் வண்ணா உந்தன் கழல் பணிந்தேனேகருணைக்கடல் நீயேகாத்தருள் புரிவாயே படம் எடுத்தாடிய பாம்பின் தலைமீதுநடனம் புரிந்தவனே நந்த குமாரனே பரிதனை பிளந்த பாலகோபாலனேகரிதனை வீழ்த்தியே கஞ்சனை அழித்தவனேகிரிதனை ஏந்தியே கோகுலம் காத்தவனேசரிநிகர் இல்லாத சுந்தர குமாரனே