அருள்மிகு பழனிமலை முருகன்:
பழனி மலைமீது பண்டாரமாய் நின்ற
அழகனே உந்தன் கழல் பணிந்தேனே
குழந்தை வேலனே குன்றுதோறாடும்
அழல்வண்ணனே அருள்புரிவாயே
பழவினை தீர்த்து பண்பும் ஞானமும்
மழலைச் செல்வமும்
மட்டிலா மகிழ்ச்சியும்
சுழலும் உலகிலே சுந்தரா உனைப்போலே
வழங்கிடும் தெய்வம் வேறெவரய்யா