அருள்மிகு குகன்
கந்தன் பேரைநீ கேட்டால் வந்த வினை நீங்கிடுமே
வேலன் பேரைநீ கேட்டால் காலனவன் ஓடிடுவான்
அந்தரங்க சுத்தியுடன் சுந்தரன் நாமத்தை
விரும்பிநீ கேட்டாலே கேட்காமல் அருள்வானே
தித்திக்கும் திருப்புகழை தினம் தினம் கேட்டாலே
எத்திக்கும் புகழ்பரவ ஏற்றமுடன் வாழ்ந்திடலாம்
புத்தியுடன்
குகன்பேரை
செவியேநீ கேட்பாயே
பத்தியுடன் பக்தர்கள் பாசுரங்கள் பாடுகையில்