மூவிரண்டு முகத்தானை முத்துக்குமாரனைகூவி அழைத்தாலே குருவாய் வருவானே காவிரிக் கரையமர்ந்த வயலூர் முருகனைசேவித்து நின்றாலே செல்வமெல்லாம் தருவானே மூவிழி முதல்வன் மைந்தனை தூமலர்தூவியே தொழுதாலே துணையாக நிற்பானேஆவினன்குடி வாழும் அழகு சுந்தரனைநாவினால் பாடினால் நல்லருள் புரிவானே