முருகன்

அருள்மிகு குன்றக்குடி குமரன்

குன்றக்குடி அமர்ந்த குமரனே குகனேஎன்றும் உனைப்பணியும் எந்தனுக்கு அருள்வாயே கன்றுக்கு இரங்கிடும் கறவைப் பசுபோலேஇன்றே வந்தெனக்கு இன்னருள் புரிவாயே புனல்மதி சூடிய புண்ணியன் கண்ணிலேகனலென வந்தவனே கார்த்திகைச் செல்வனேவனமகள் வான்மகள் மனங்கவர் சுந்தரனேகனவிலும் நீதானே கந்தனே கடம்பனே

முருகன்

அருள்மிகு சரவணன்:

கந்தன் அருள் பெறவே காத்திருக்க வேண்டாமேவந்தனை செய்தாலே தந்திடுவான் அக்கணமே அந்தரியும் சுந்தரனும் அருளிய பாலனையேஎந்தக் கணம் நினைத்தாலும் எழுந்தோடி வருவானே சந்ததிகள் தருவானே சரவணா என்றாலேமந்தமதி களைவானே மால்மருகா என்றாலேவந்தவினை விலகிடுமே வடிவேலா என்றாலேகுந்தகம் வாராதே குகா குகா என்றாலே

முருகன்

அருள்மிகு விசாகன்:

வைகாசி திங்களிலே விசாக நன்னாளிலேகைலாச நாதனின் கண்ணிலே வந்தவனே கைலயங்கிரியினிலே கங்கையில் மலர்ந்தவனேகார்த்திகை பெண்களின் கரங்களில் வளர்ந்தவனே பார்வதி கரத்தாலே ஓருருவாய் ஆனவனேபார் வலம் வந்தவனே பழனியில் நின்றவனேபார்வதி வேலாலே சூரனை வென்றவனேபார்புகழ் பரங்கிரியில் அமர்ந்த சுந்தரனே

முருகன்

அருள்மிகு வடிவேலன்:

விரைந்து நீ வருவாயே சுந்தர வடிவேலாகரைந்துனை அழைத்தேனே கலியுக வரதனே திரை கடலோடியே திரவியம் தேடியேநரை விழும் வரையிலே நானுனை மறந்தேனே வரைமுறை இன்றியே வாழ்ந்து வந்தேனேநுரைகடல் வண்ணன் நாரணன் மருகனேஅரைமதி சூடிய அண்ணலின் மைந்தனேதிரையினை நீக்கியே திருவருள் புரிவாயே

முருகன்

அருள்மிகு வடிவேல் முருகன்:

முருகா முருகா என்று முழங்கினாலேஅருகே வந்து அவனும் அருள்புரிவானே குமரா குமரா என்று கூவிடுவோமேசமராபுரி வாழும் சண்முக நாதனை கலியுக வரதனும் கார்த்திகேயனேவலிமை தருவதும் வடிவேல் அழகனேசந்ததிகள் தரும் சுந்தரன் அவனேஎந்த வேளையிலும் கந்தன் வருவானே

முருகன்

அருள்மிகு சிறுவாபுரி முருகன்:

குறமகள் கொஞ்சிடும் குமரனே முருகாகெஞ்சி உனை அழைத்தும் கேளாதிருப்பதென்ன மறவாமல் உன்னை மனதால் நினைத்தேனேமால்மருகா குஹா மனம் இரங்காயோ வறுமை நீங்கியே வளமுடன் வாழவும்உறுபிணி இலாத உடல்நலம் பேணவும்அறுபடை முருகா உன் ஆறெழுத்தோதினேன்சிறுவாபுரி முருகா சுந்தரனே அருள்வாய்

முருகன்

அருள்மிகு திருத்தணி முருகன்:

தருணம் வரவில்லையோ தாமதமும் ஏனோதிருத்தணி மலையமர்ந்த திருமுருகா இன்னும் கருமுகில் வண்ணன் மருகனே முருகாகுருவுருவாய் வந்து திருவருள் புரியவே அருணகிரிக்காகவே அருணை அடைந்தாயேகுருபரன் குறைதீர்க்க கடலோரம் நின்றாயேஅருந்தமிழ் அவ்வையுடன் அளாவிடச் சென்றாயேகுருமணியே சுந்தரா கருணை காட்டவே

முருகன்

அருள்மிகு ஆறுமுகவேலன்:

ஆதரிப்பார் எவரைய்யா ஆறுமுக வேலவனேபேதமின்றி ஆதரிக்க பெருமானே உன்னையன்றி சேதமின்றி சூரனையே சேவலும் மயிலுமாக்கிநாதனேநீ ஆதரித்து நல்லருள் புரிந்தாயே வாதமாதி நோய்கள் ஏதும் வந்தணுகா வண்ணம்சோதனைகள் ஏதுமின்றி சுந்தரமாய் வாழ்ந்திடவேகாதல்மிகு வள்ளியுடன் காட்சி தரும் கதிர்வேலாபாதமலர் பணிந்தேனே பரிவுடன் அருள்வாயே

முருகன்

அருள்மிகு முருகன், திருப்பரங்குன்றம்:

பாராமுகம் ஏனைய்யா பரங்குன்றவாசனேஓராறு முகத்தினிலே ஒருமுகம் பார்க்காதோ ஊரார் சொல்கேட்டு ஓடோடி வந்தேனேஆராவமுதனே அடிமலர் பணிந்தேனே தீராத வினையாவும் தீர்ந்திடும் என்றாரேசேராத செல்வமெலாம் சேர்ந்திடும் என்றாரேசூராதியரை வென்ற சுந்தர வடிவேலாநாராயணன் மருகா நல்லருள் புரிவாயே

முருகன்

அருள்மிகு கந்தன்:

திருப்புகழ் போதுமே இருமைக்கும் இன்பம் தரும்அருட்பெருங்கடலாம் ஆறுமுகனைப் பாடும் இருமாதின் மணவாளன் திருமுருகன் அருளாலேஅருணகிரி அருளிய அற்புத பாமாலை திருமணம் நிகழவும் கரு உருவாகவும்பெருஞ்சிறப்புடனே பாரினில் வாழவும்ஒருமனதுடனே ஓதுவார் தமக்குகருணை புரியும் கந்தனின் சுந்தர