முருகன்

அருள்மிகு கந்தன்:

கேட்கவும் வேண்டுமோ கந்தனே உன்னிடம்கருணை புரி என்று உருகி உனை நினைத்து கேட்காமலே தரும் வள்ளலும் நீயென்றேபாட்டெழுதி வைத்தாரே பண்டிதரும் அன்றே முருகா என்றே ஒருமுறை அழைத்தாலேஇருகரம் கூப்பியே திருவடி பணிந்தாலேகுருவாகவே வந்து அருள்புரிவாய் என்றஅருணகிரிக்கருளிய ஆறுமுக சுந்தரனே

முருகன்

அருள்மிகு ஆறுமுக வேலவன்:

உனையே நினைந்து உருகிடும் எனையேநினைவில் கொள்வாயே நீலகண்டன் மைந்தனே அணை மடை திறந்த ஆற்று வெள்ளம் போலேஅருளைத் தந்திடும் ஆறுமுக வேலவனே அகத்திய முனிவருக்கு அருந்தமிழும் தந்துகுமரகுரு தாசருக்கு உபதேசமும் செய்துகச்சியப்பரும் உனது காவியம் பாடவும்கனிந்தருள் புரிந்த கந்தனே சுந்தரனே

முருகன்

அருள்மிகு ஞானவேல் முருகன்:

ஏனோ என்மனம் மயங்குதே முருகாஞானோதயம் தருவாய் ஞானவேல் முருகா மானோடு விளையாடும் மங்கை மணாளனேவானோர் தலைவனாம் வாசவன் மருகனே பந்த பாசத்திலே பற்றுவைத்த என்சிந்தனை யாவுமே செல்வம் சேர்ப்பதிலேஎந்த நேரமும் சுந்தரனே உன்னைவந்தனை செய்யவே வரம் அருள்வாயே

முருகன்

அருள்மிகு குளஞ்சியப்பர்:

இளகிய மனமுடைய குளஞ்சியப்பனேஉளமாரப் பணிந்தேனே உன்னருள் வேண்டியே அளவிலா பெம்மானை ஆரூரர் பாடவேகளவுசெய் வேடனாய் வந்தருள் புரிந்தவனே அருணகிரி குமரகுரு அவ்வைக்கு அருளியதைஅறிவேனே ஆறுமுகா அறுபடை அமர்ந்தவனேகுஞ்சரிவள்ளியுடன் கொஞ்சிடும் சுந்தரனேதஞ்சமடைந்தேனே தயை புரிவாயே

முருகன்

அருள்மிகு செங்கோட்டு வேலன்:

மங்கையொரு பாகனுடன் மலைமீதமர்ந்தசங்கரன் மைந்தனே செங்கோட்டு வேலவனே மங்கை உறை மார்பன் மருகனே குகனேசங்கத்தமிழ் தந்த சண்முகசுந்தரனே விந்தை பலபுரிந்து வீணரை வீழ்த்தியேசிந்தை கவர்ந்தவனே சிங்கார வேலனேஎந்தையும் தாயுமாய்‌ எனைக் காத்தருளும்கந்தையனே கடம்பா கார்த்திகை பாலனே

முருகன்

அருள்மிகு கந்தசுவாமி, கந்தகோட்டம்:

கந்தகோட்டத்துறை கந்தவேளே எனக்குதந்தையும் நீயே தாயும் நீயே அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியன்தந்திட்ட சுந்தரனே தயை புரிவாயே அருட்பா வள்ளலும் அடியவரும் போற்றும்திருப்போரூர் உறை திருமால் மருகனேமுத்திக்கு வித்தான முத்துக்குமாரனேஅத்திமுகன் தம்பியே ஆறுமுகவேலவனே

முருகன்

அருள்மிகு வயலூர் முருகன்:

மூவிரண்டு முகத்தானை முத்துக்குமாரனைகூவி அழைத்தாலே குருவாய் வருவானே காவிரிக் கரையமர்ந்த வயலூர் முருகனைசேவித்து நின்றாலே செல்வமெல்லாம் தருவானே மூவிழி முதல்வன் மைந்தனை தூமலர்தூவியே தொழுதாலே துணையாக நிற்பானேஆவினன்குடி வாழும் அழகு சுந்தரனைநாவினால் பாடினால் நல்லருள் புரிவானே

முருகன்

அருள்மிகு முருகன்:

இன்னும் என்ன செய்வதோ ஈசன் திருமகனேஉன்னருளைப் பெறவே உன்னைப் பணிவதன்றி பன்னிரு ராசியிலே பக்தர் சிக்கி தவிக்கையிலேபன்னிரு விழியிருந்தும் பாராதிருப்பதென்ன முன்னம் செய்த வினை விலக முருகா என்றேனேசன்னதி வந்துன்னை சேவித்து நின்றேனேஇன்னமும் தாமதமேன் ஈராறு கரத்தோனேஇன்னருள் புரிவாயே ஈடில்லா சுந்தரனே

முருகன்

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி, திருப்பரங்குன்றம்:

சரவணபவனே சண்முகசுந்தரனேவரமருள்வாயே வீரவிசாகனே அரவணிந்தாடும் அரனின் திருமகனேஅரவுமீதாடிய அரியின் மருமகனே மரமாகி நின்ற சூரனைப் பிளந்துசுரபதி மகளின் கரந்தனை பிடித்தபரங்கிரி அமர்ந்த பார்வதி மைந்தனேபரவசமுடனே பாடிஉனைப் பணிந்தேனே

முருகன்

அருள்மிகு கனகவேல் கந்தன்:

கனகசபாபதி கனல்விழி தனில் வந்தகனகவேல் கந்தாஉன் கழலினையே துணை மனதுக்கினிய உன்னை மனதாலும் வாக்காலும்மனமுருகி பணிந்தேனே மனமிரங்கி அருள்வாயே சினமுடன் சூரனை சிதைத்த சண்முகனேதனமுடன் கல்வியும் தந்திடும் சுந்தரனேஉனது பணி இந்த உலகினை காப்பதுவேஎனது பணி உனக்கு பணிசெய்து கிடப்பதுவே