பாரினிலே கண்டதில்லை யாரிடமும் கேட்டதில்லைவாரித்தரும் வள்ளலான வேலனைப்போல் வேறொருவர் மாரிதரும் நீர் போலே மக்கள் மனம் குளிரகோரிடும் வரமெல்லாம் கொடுத்து மகிழ்வானே பரமனின் மைந்தனாம் பார்வதி பாலனாம்சுரர்களை காத்திடவே சூரனை வென்றவனாம்சரவணபவ குகனை சண்முகசுந்தரனைசரண்புகுந்தாலே சகலமும் தருவானே