சூராதி சூரனே சுந்தரா கண் பாராய்வீராதி வீரனே வேலனே நீ வாராய் பாராதிருப்பதேனோ பதமலர் பணிந்துமேவாராதிருப்பதேனோ வண்ணமயில் இருந்துமே கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய்பண்ணிசை பாவலர் பாடியே புகழ்ந்தாரேமண்ணளந்தான் மருகனே மனமிரங்கிடுவாயேவேண்டிடும் வரங்களையே வேலனே தருவாயே