அருள்மிகு ஆறுமுகவேலன்:
ஆதரிப்பார் எவரைய்யா ஆறுமுக வேலவனே
பேதமின்றி ஆதரிக்க பெருமானே உன்னையன்றி
சேதமின்றி சூரனையே சேவலும் மயிலுமாக்கி
நாதனேநீ ஆதரித்து நல்லருள் புரிந்தாயே
வாதமாதி நோய்கள் ஏதும் வந்தணுகா வண்ணம்
சோதனைகள் ஏதுமின்றி சுந்தரமாய் வாழ்ந்திடவே
காதல்மிகு வள்ளியுடன் காட்சி தரும் கதிர்வேலா
பாதமலர் பணிந்தேனே பரிவுடன் அருள்வாயே