அருள்மிகு ஆறுமுக வேலன்:
அந்தி நிறத்தோனே ஆறுமுக வேலவனே
இந்திரன் மருமகனே இருபதம் பணிந்தேனே
சந்திரன் சூடிடும் சங்கரன் மகிழவே
மந்திரப் பொருள் உரைத்த முருகனே குகனே
விந்திய மலையினை அடக்கிய அகத்தியர்க்கு
முந்தி தமிழ் தந்த கந்தனே சுந்தரனே
குந்தியின் மைந்தரை காத்தவன் மருகனே
வந்தித்தேன் உன்னை வரமருள்வாயே