முருகன்

அருள்மிகு ஓதிமலை முருகன்

ஆதிஅருணாசலத்தில் அருணகிரிக்கருளியவா
ஓதிஉன்னை அழைத்தேனே ஓடிவந்தருள்வாயே

சோதிவடிவானவனின் சுந்தர திருமகனே
ஆதிசக்தி மனமகிழ அரக்கனை அழித்தவனே

வேதியரும் போற்றிடும் வேதவிழுப்பொருளே
ஆதிசேஷன் மீதுறையும் அரங்கனின் மருகனே
மேதினியில் அடியவர்க்கு வேண்டும் வரமரளும்
ஓதிமலை முருகனே காத்தருள வாருமய்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.