அருள்மிகு குன்னக்குடி சண்முகநாதன்:
முன்னம் செய்த தவப்பயனோ முத்துக்குமாரனே
உன்னடியை தொழுவதற்கு உத்தம பிறவி தந்தாய்
என்னவரம் கேட்பதென்றே ஏதும் அறியேனே
என்னருகே நீ இருந்தால் வேறேதும் வேண்டுமோ
நின்னருளைப் பெறவே நித்தம் உன் புகழ்பாடி
குன்னக்குடி குன்றேறி காவடி ஏந்திஉன்
சன்னதி வந்தேனே சண்முகசுந்தரனே
இன்னருள் புரிவாயே ஈசன் திருமகனே