அருள்மிகு சரவணன்:
கந்தன் அருள் பெறவே காத்திருக்க வேண்டாமே
வந்தனை செய்தாலே தந்திடுவான் அக்கணமே
அந்தரியும் சுந்தரனும் அருளிய பாலனையே
எந்தக் கணம் நினைத்தாலும் எழுந்தோடி வருவானே
சந்ததிகள் தருவானே சரவணா என்றாலே
மந்தமதி களைவானே மால்மருகா என்றாலே
வந்தவினை விலகிடுமே வடிவேலா என்றாலே
குந்தகம் வாராதே குகா குகா என்றாலே