அருள்மிகு வடிவேல் முருகன்:
முருகா முருகா என்று முழங்கினாலே
அருகே வந்து அவனும் அருள்புரிவானே
குமரா குமரா என்று கூவிடுவோமே
சமராபுரி வாழும் சண்முக நாதனை
கலியுக வரதனும் கார்த்திகேயனே
வலிமை தருவதும் வடிவேல் அழகனே
சந்ததிகள் தரும் சுந்தரன் அவனே
எந்த வேளையிலும் கந்தன் வருவானே