சிவன்

அருள்மிகு சாம்ப சதாசிவன்:

சடைமுடி சுந்தரனே சாம்ப சதாசிவனேஅடைக்கலம் தந்தெனக்கு அருள் புரிவாயே விடை மீதேறியே வீதிவலம் வந்துகடைக்கண் நோக்கியே கருணை புரிகின்ற ஆழி சூழ் உலகினை அருள்வலம் வருகையில்காழியூர் பிள்ளைக்கு கனிவுடன் அருளியஊழிமுதல்வனே உமையொரு பாகனேஏழிரண்டுலகிற்கும் எழுந்தருள் புரியும்

சிவன்

அருள்மிகு கபாலீஸ்வரர்

மயிலைலே மேவும் கயிலை நாதனேகை கூப்பித் தொழுதோமே கருணை புரிவாயே பயிரெல்லாம் செழிக்க பாரினில் அறம் தழைக்கஉயிரெல்லாம் காத்திடவே உற்ற மருந்தருள்வாயே கற்பகவல்லியின் காதல் மணாளனேவாயிலார் மனக்கோயில் வழிபடு சுந்தரனேபூம்பாவைக் கருளிய பிள்ளையின் தலைவனேபங்குனியில் விழா காணும் கபாலிநாதனே

சிவன்

அருள்மிகு ஆலவாய் அண்ணல்:

குலமொன்றில்லாத கூத்தனே எந்தன்குலதெய்வம் நீயே காத்தருள்புரிவாயே அலகில் சோதியனே ஆலவாய் அண்ணலேஉலகில் உயிர்க்கெலாம் உணவளிப்பவனே வலதுபதம் தூக்கி வெள்ளியம்பலத்திலேசலங்கை அணிந்து சதிராடும் சுந்தரனேமலருடன் கிளிஏந்தும் மங்கை மணாளனேகுலச்சிறைக்கருளிய கண்ணுதற்கடவுளே

சிவன்

அருள்மிகு சிவன்;

ஆலின் கீழமர்ந்த ஆலால சுந்தரனேபாலித்தருள்வாயே பரமதயாளனே ஆலிலைக்கண்ணனும் அயனும் அறியாதசூலினி மணாளனே சூலாயுத பாணியே காலினால் முயலகனை காலனை கடிந்தவனேகூலிக்கு மண் சுமந்த கூடல் நாயகனேவாலியை வதைத்த வேந்தனும் வணங்கியவேலியாய் நின்ற வேணுவனநாதனே

முருகன்

அருள்மிகு குன்னக்குடி சண்முகநாதன்:

முன்னம் செய்த தவப்பயனோ முத்துக்குமாரனேஉன்னடியை தொழுவதற்கு உத்தம பிறவி தந்தாய் என்னவரம் கேட்பதென்றே ஏதும் அறியேனேஎன்னருகே நீ இருந்தால் வேறேதும் வேண்டுமோ நின்னருளைப் பெறவே நித்தம் உன் புகழ்பாடிகுன்னக்குடி குன்றேறி காவடி ஏந்திஉன்சன்னதி வந்தேனே சண்முகசுந்தரனேஇன்னருள் புரிவாயே ஈசன் திருமகனே

முருகன்

அருள்மிகு விசாகன்:

விசாக நன்னாளிலே விண்ணவரை காக்கவிசுவநாதன் கண்மணியாய் வந்த சுந்தரனே விசாலாட்சி கரத்தாலே வீரவேல் பெற்றவனேவீரபாகு துணையோடு சூரனை வேன்றவனே மலரவன் அறியாத மந்திரம் சொன்னவனேமலர்மகள் மருகனே மலைதனைப் பிளந்தவனேமலர்முகம் காணவே மலையேறி வந்துனதுமலர்ப்பதம் பணிந்தேனே மனமகிழ்ந்தருள்வாயே

முருகன்

அருள்மிகு குழந்தை வேலாயுதன்:

குழந்தை வேலாயுதனே குருபரனே உந்தன்கழல் பணிந்தேனே காத்தருள் சுந்தரனே மழபாடி மாணிக்கம் மகேசன் மைந்தனேகுழலூதி மனங்கவர்ந்த கண்ணன் மருகனே பழம் பெற வேண்டியே புவனம் வலம்வந்துபழனிமலையில் நின்ற பாலகுமாரனேபழமே நீயென்று பாடிய ஔவைக்குபழம் தந்த பாலகனே பைந்தமிழ் தந்தவனே

முருகன்

அருள்மிகு சக்தி வடிவேலன்:

சக்தி வடிவேலனே சண்முகனே குகனேபக்தியுடனே உந்தன் பதமலர் பணிந்தேனே யுக்தியும் அறிவேனே உன் திருவருள் பெறவேமுக்தி தரும் மந்திரமாம் முருகா என்று உரைப்பதுவே கூலியாளாய் வந்த கூத்தன் மைந்தனேமாலிருஞ்சோலை உறை மாதவன் மருகனேவேலினாலே மலையைப் பிளந்த வீரனேசூலினி புதல்வனே சுந்தரகுமாரனே

முருகன்

ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி : Telugu

வரமிய்யவய்யா வல்லி நாயகாதரணி லோ நாகு கதி வேறெவரய்யா சுரலுனி ரக்ஷிஞ்சி சூருனி சிக்ஷிஞ்ச்சினஸ்ரீ சுப்ரமண்யா சுந்தர குமாரா பவபயம் ஹரிஞ்சே பரமதயாளாஞானமுலிச்சே ஞானபண்டிதாவிவாஹம் ப்ராப்திஞ்சே வீரவிசாகாஐஸ்வர்யம் அந்திஞ்சேஅந்தரி பாலா

முருகன்

ஸ்ரீ கார்த்திகேய ஸ்வாமி:Telugu

ப்ரதி கொண்டலபை கொலுவைவுண்டேபார்வதி நந்துனி பஜிம்பவே மனஸா ப்ரணவஸ்வரூபடு பாலகுருநாதடுபக்தவத்ஸலுடு பாலநேத்ரசுதடு வல்லிகாந்த்துடே வம்சவ்ருத்திகரடுதேவசேனாபதே தேவாதிதேவுடுசண்முகசுந்தருடே சிந்த்த தீர்த்துடுகார்த்திகேயடே கருணாசமுத்ருடு