அருள்மிகு அப்பு லிங்கம், திருவானைக்காவல்:
ஆனைக்காவினிலே அப்பு லிங்கமாய்
அற்புதக்காட்சி தரும் ஆண்டவனே சரணம்
ஆனைக்கருள்செய்த அண்ணலுடனே
அகிலாண்டேஸ்வரி அருளாட்சி செய்திடும்
நந்தி முன்னமர்ந்த நாயகன் உனைநாடி
சந்திவேளையிலே சன்னதி வந்தேனே
சந்திரன் சூடிய சோமசுந்தரனே
வந்தித்தேன் உன்னை வரமருள்வாயே