அருள்மிகு அருணாசலசிவன்:
அருணாசல சிவனே அருவுருவானவனே
அருள் புரிவாயே கருணை கடலே
அருமறை போற்றிடும் உருத்திர பசுபதியே
அருந்தமிழ் இசைகேட்டு உருகிடும் சுந்தரனே
திருக்காழிப் பிள்ளையும் திருவாமூர் அப்பரும்
திருநாவலூரரும் திருவாதவூரரும்
திருமூலரும் தந்த திருமுறை பாடிஉன்
திருவுளம் மகிழவே திருவடி பணிந்தேனே