அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர், காஞ்சிபுரம்:
சிவனை நினை மனமே தினமே_ சதா
சிவனை நினை மனமே
அவனின்றி ஓரணுவும் அசையாதென்பதை
கவனம் கொண்டே நீ காஞ்சி ஏகம்பனை
தவமும் தானமும் தந்திடும் பலனையே
அவனை நினைத்தாலே அருள்புரிவானே
சிவந்த நிறமுடைய சுந்தரன் பார்வையிலே
நவக்கிரகங்களும் நன்மை செய்திடுமே