அருள்மிகு சங்கரநாராயணர்:
ஆதிஅந்தமிலா அருட்பெருஞ்ஜோதியே
ஆதிசிவ பெருமானே அருள் புரிவாயே
ஆதிரை நாளிலே ஆனந்த நடம் புரியும்
ஆதிஅருணாசலம் அமர்ந்த சுந்தரனே
ஆதி பராசக்தியின் ஆடித்தபசினிலே
ஆதி மூலமே என்ற ஆனைக்கருளிய
ஆதிசேஷன் மீது அறிதுயில் புரியும்
ஆதிகேசவன் அங்கம் பாதியாய் நின்றவனே