அருள்மிகு தாயுமான சுவாமி, திருச்சிராப்பள்ளி:
சிராப்பள்ளி மேவிய சிவபெருமானே
பராமுகம் காட்டாமல் பரிந்தருள்புரிவாயே
சராசரம் எலாம் புரக்கும் பராபரமே
மட்டுவார்குழலி மனங்கவர் மணாளனே
மரவுரி தரித்த மன்னனும் போற்றிய
சரமலர் கொன்றை சூடிய சுந்தரனே
தரணியை காத்திடும் தாயுமானவனே
பரமனே உந்தன் பதமலர் பணிந்தேனே