அருள்மிகு நெல்லையப்பர் (வேணுவனநாதர்), திருநெல்வேலி:
வேணுவனநாதனே வேதவிழுப்பொருளே
தாணுவே உந்தன் திருவடியே சரணம்
வேணுகோபாலனும் வேதியனும் தேடியும்
காணுதற்கரிய காந்திமதி நாதனே
வில்லை வளைத்த வேந்தனும் போற்றிய
தில்லை நாதனே தாமிர சபையோனே
நெல்லையப்பனே நிமலனே சுந்தரனே
எல்லை இல் சோதியனே ஏழைஎனக்கருள்வாயே