அருள்மிகு பரமேஸ்வரன்:
பார்வதி நாயகனே பரமேஸ்வரனே
வார்சடை வள்ளலை வரமருள்வாயே
பார்த்தனுக்கிரங்கி பாசுபதம் அளித்து
பார்புகழ் ராமனின் பெயரினை புகழ்ந்த
கார்வண்ணன் அயனும் காணுதற்கரியதாய்
கார்த்திகை முழு நிலவில் கனலாய் நின்றவனே
தாரமர்கொன்றை சூடிய சுந்தரனே
பாரினில் உயிர்க்கெலாம் படி அளப்பவனே