முருகன்

அருள்மிகு சிறுவாபுரி முருகன்:

குறமகள் கொஞ்சிடும் குமரனே முருகாகெஞ்சி உனை அழைத்தும் கேளாதிருப்பதென்ன மறவாமல் உன்னை மனதால் நினைத்தேனேமால்மருகா குஹா மனம் இரங்காயோ வறுமை நீங்கியே வளமுடன் வாழவும்உறுபிணி இலாத உடல்நலம் பேணவும்அறுபடை முருகா உன் ஆறெழுத்தோதினேன்சிறுவாபுரி முருகா சுந்தரனே அருள்வாய்