முருகன்

அருள்மிகு குன்றக்குடி குமரன்

குன்றக்குடி அமர்ந்த குமரனே குகனேஎன்றும் உனைப்பணியும் எந்தனுக்கு அருள்வாயே கன்றுக்கு இரங்கிடும் கறவைப் பசுபோலேஇன்றே வந்தெனக்கு இன்னருள் புரிவாயே புனல்மதி சூடிய புண்ணியன் கண்ணிலேகனலென வந்தவனே கார்த்திகைச் செல்வனேவனமகள் வான்மகள் மனங்கவர் சுந்தரனேகனவிலும் நீதானே கந்தனே கடம்பனே

முருகன்

அருள்மிகு கதிர்வேல் முருகன்:

கிரிமகள் மைந்தனே கந்தனே சுந்தரனேகரிமுகன் சோதரனே காத்தருள் புரிவாயே கிரிதரன் மருகனே கார்த்திகேயனேபுரிசடை பரமனின் புதல்வனே குகனே கிரிதனை தகர்த்த கங்கை பாலனேஅரிமுகனை அழித்த ஆறுமுக வேலவனேவரிவளை அணிந்த வள்ளி மணாளனேகரிமகள் கரம்பிடித்த கதிர்வேல் முருகனே