முருகன்

அருள்மிகு கண்டி கதிர்வேலன்:

கண்டி கதிர்வேலனே கார்த்திகை பாலனேகண்விழிப் பார்வையிலே காத்தருள் புரிபவனே அண்ணாமலையினிலே அருணகிரிநாதருக்குபண்ணோடு உன்புகழ்பாட பரிந்தருள் புரிந்தவனே வண்ணமயில் ஏறிவந்து விண்ணவரை மீட்டஅண்ணலே அழகனே ஆறுபடை அமர்ந்தவனேபண்டிதர் பாமரர் போற்றிடும் சுந்தரனேஎண்ணியதெல்லாம் தரும் எந்தாயுமானவனே

முருகன்

அருள்மிகு சிறுவாபுரி முருகன்:

குறமகள் கொஞ்சிடும் குமரனே முருகாகெஞ்சி உனை அழைத்தும் கேளாதிருப்பதென்ன மறவாமல் உன்னை மனதால் நினைத்தேனேமால்மருகா குஹா மனம் இரங்காயோ வறுமை நீங்கியே வளமுடன் வாழவும்உறுபிணி இலாத உடல்நலம் பேணவும்அறுபடை முருகா உன் ஆறெழுத்தோதினேன்சிறுவாபுரி முருகா சுந்தரனே அருள்வாய்