முன்னம் செய்த தவப்பயனோ முத்துக்குமாரனேஉன்னடியை தொழுவதற்கு உத்தம பிறவி தந்தாய் என்னவரம் கேட்பதென்றே ஏதும் அறியேனேஎன்னருகே நீ இருந்தால் வேறேதும் வேண்டுமோ நின்னருளைப் பெறவே நித்தம் உன் புகழ்பாடிகுன்னக்குடி குன்றேறி காவடி ஏந்திஉன்சன்னதி வந்தேனே சண்முகசுந்தரனேஇன்னருள் புரிவாயே ஈசன் திருமகனே
