அந்தி நிறத்தோனே ஆறுமுக வேலவனேஇந்திரன் மருமகனே இருபதம் பணிந்தேனே சந்திரன் சூடிடும் சங்கரன் மகிழவேமந்திரப் பொருள் உரைத்த முருகனே குகனே விந்திய மலையினை அடக்கிய அகத்தியர்க்குமுந்தி தமிழ் தந்த கந்தனே சுந்தரனேகுந்தியின் மைந்தரை காத்தவன் மருகனேவந்தித்தேன் உன்னை வரமருள்வாயே
