செய்வதொன்று அறிவேனே செங்கதிர் வேலனேமெய்யன்புடனே உன் மலரடி தொழுவதே உய்வதற்கு உனையன்றி உறுதுணை எவரைய்யாஐயமும் ஏதைய்யா ஆறுமுக வேலைய்யா பால் வண்ணன் பாலனே பன்னிரு கையோனேமாலவன் மருகனே மந்திரப் பொருளோனேவேலுடன் மயிலேறி வலம்வந்த சுந்தரனேகோலுடன் மலையேறி காட்சிதரும் கந்தனே
காத்திருக்க வைப்பதேனோ கந்தபெருமானேகாத்தருள் புரியவே காலமும் கரையுதே தோத்திரம் அறியாமல் தொழுது நின்றேனேபாத்திரம் பார்க்காமல் பரிந்தருள்வாயே திருப்பரங்கிரிதனை வலமும் வந்தேனேதிருச்சீரலைவாயில் நீராடிப் பணிந்தேனேதிருவாவினன்குடியில் காவடி சுமந்தேனேதிருத்தணி மலையினிலே படிபூசை செய்தேனே சுவாமிமலை மீதுறையும் சுவாமிநாதனேசோலைமலை மேவிய சுந்தரனே குகனேஆறுமுக வேலவனே ஆதிசிவன் பாலகனேவீறுகொண்ட முருகனே விரைந்தருள் புரிவாயே
தாமதம் செய்வதேனடி தோழி எனக்குதயைபுரிய இன்னும் தணிகை வேலனவன் சாமத்திலே விழித்து சஷ்டி நோன்பிருந்துசங்கரன் மைந்தனை சதா நினைத்துமே அறுபடை வீடும் சென்று வந்தேனடிகாவடி பலவும் கொண்டு சென்றேனடிவேண்டுதல் யாவும் வேண்டி நின்றாலுமேசெந்தூர் தனில் வாழும் சுந்தர வேலனவன்
குன்றக்குடி அமர்ந்த குமரனே குகனேஎன்றும் உனைப்பணியும் எந்தனுக்கு அருள்வாயே கன்றுக்கு இரங்கிடும் கறவைப் பசுபோலேஇன்றே வந்தெனக்கு இன்னருள் புரிவாயே புனல்மதி சூடிய புண்ணியன் கண்ணிலேகனலென வந்தவனே கார்த்திகைச் செல்வனேவனமகள் வான்மகள் மனங்கவர் சுந்தரனேகனவிலும் நீதானே கந்தனே கடம்பனே
கந்தன் அருள் பெறவே காத்திருக்க வேண்டாமேவந்தனை செய்தாலே தந்திடுவான் அக்கணமே அந்தரியும் சுந்தரனும் அருளிய பாலனையேஎந்தக் கணம் நினைத்தாலும் எழுந்தோடி வருவானே சந்ததிகள் தருவானே சரவணா என்றாலேமந்தமதி களைவானே மால்மருகா என்றாலேவந்தவினை விலகிடுமே வடிவேலா என்றாலேகுந்தகம் வாராதே குகா குகா என்றாலே
வைகாசி திங்களிலே விசாக நன்னாளிலேகைலாச நாதனின் கண்ணிலே வந்தவனே கைலயங்கிரியினிலே கங்கையில் மலர்ந்தவனேகார்த்திகை பெண்களின் கரங்களில் வளர்ந்தவனே பார்வதி கரத்தாலே ஓருருவாய் ஆனவனேபார் வலம் வந்தவனே பழனியில் நின்றவனேபார்வதி வேலாலே சூரனை வென்றவனேபார்புகழ் பரங்கிரியில் அமர்ந்த சுந்தரனே
விரைந்து நீ வருவாயே சுந்தர வடிவேலாகரைந்துனை அழைத்தேனே கலியுக வரதனே திரை கடலோடியே திரவியம் தேடியேநரை விழும் வரையிலே நானுனை மறந்தேனே வரைமுறை இன்றியே வாழ்ந்து வந்தேனேநுரைகடல் வண்ணன் நாரணன் மருகனேஅரைமதி சூடிய அண்ணலின் மைந்தனேதிரையினை நீக்கியே திருவருள் புரிவாயே
முருகா முருகா என்று முழங்கினாலேஅருகே வந்து அவனும் அருள்புரிவானே குமரா குமரா என்று கூவிடுவோமேசமராபுரி வாழும் சண்முக நாதனை கலியுக வரதனும் கார்த்திகேயனேவலிமை தருவதும் வடிவேல் அழகனேசந்ததிகள் தரும் சுந்தரன் அவனேஎந்த வேளையிலும் கந்தன் வருவானே
ஆதரிப்பார் எவரைய்யா ஆறுமுக வேலவனேபேதமின்றி ஆதரிக்க பெருமானே உன்னையன்றி சேதமின்றி சூரனையே சேவலும் மயிலுமாக்கிநாதனேநீ ஆதரித்து நல்லருள் புரிந்தாயே வாதமாதி நோய்கள் ஏதும் வந்தணுகா வண்ணம்சோதனைகள் ஏதுமின்றி சுந்தரமாய் வாழ்ந்திடவேகாதல்மிகு வள்ளியுடன் காட்சி தரும் கதிர்வேலாபாதமலர் பணிந்தேனே பரிவுடன் அருள்வாயே
பாராமுகம் ஏனைய்யா பரங்குன்றவாசனேஓராறு முகத்தினிலே ஒருமுகம் பார்க்காதோ ஊரார் சொல்கேட்டு ஓடோடி வந்தேனேஆராவமுதனே அடிமலர் பணிந்தேனே தீராத வினையாவும் தீர்ந்திடும் என்றாரேசேராத செல்வமெலாம் சேர்ந்திடும் என்றாரேசூராதியரை வென்ற சுந்தர வடிவேலாநாராயணன் மருகா நல்லருள் புரிவாயே