முருகன்

அருள்மிகு கந்தன்:

திருப்புகழ் போதுமே இருமைக்கும் இன்பம் தரும்அருட்பெருங்கடலாம் ஆறுமுகனைப் பாடும் இருமாதின் மணவாளன் திருமுருகன் அருளாலேஅருணகிரி அருளிய அற்புத பாமாலை திருமணம் நிகழவும் கரு உருவாகவும்பெருஞ்சிறப்புடனே பாரினில் வாழவும்ஒருமனதுடனே ஓதுவார் தமக்குகருணை புரியும் கந்தனின் சுந்தர

முருகன்

அருள்மிகு கார்த்திகேயன்

தந்தையின் கண்ணிலே தணலாய் வந்தனைகங்கையின் குளிர்ச்சியால் அங்கம் மலர்ந்தனைகார்த்திகைப் பெண்களின் கரங்களில் வளர்ந்தனைதாயின் அணைப்பிலே சேயாய் சேர்ந்தனை பிரணவப் பொருளினை பரமனுக்குரைத்தனைசூரனை வதைத்து சுரர்களை காத்தனைவாசவன் மகளையே வலக்கரம் பிடித்தனைகுறமகள் வள்ளியை கொஞ்சி கவர்ந்தனை தமிழ் மூதாட்டியின் தமிழைரசித்தனைதிருப்புகழ் பாடவே அருணகிரிக்கருளினைகுருபரன் குரல் கேட்க குரலைக் கொடுத்தனைஅன்பருக்கருளவே அறுபடை அமர்ந்தனை

முருகன்

அருள்மிகு பழனிமலை முருகன்:

பழனி மலைமீது பண்டாரமாய் நின்றஅழகனே உந்தன் கழல் பணிந்தேனே குழந்தை வேலனே குன்றுதோறாடும்அழல்வண்ணனே அருள்புரிவாயே பழவினை தீர்த்து பண்பும் ஞானமும்மழலைச் செல்வமும்மட்டிலா மகிழ்ச்சியும்சுழலும் உலகிலே சுந்தரா உனைப்போலேவழங்கிடும் தெய்வம் வேறெவரய்யா

முருகன்

அருள்மிகு குமரன்:

மாமறை போற்றிடும் மலைமகள் மைந்தனேகுன்று தோறும் நின்ற குமரனே கேளாயோ மாமனோ வெண்ணெய்க்கு மாடுகளை மேய்த்தானேதந்தையோ பிட்டுக்கு மண்ணைச் சுமந்தானே பெருத்த வயிறு டைய பெரியவன் தம்பியேதேனுடன் தினைமாவும் தேடிவந்துண்ணவேகுறமகள் வள்ளியை காதல் புரிந்தாயேகந்தா உன் கதைஇதுவே சுந்தரா அறிவோமே

முருகன்

அருள்மிகு உச்சிமலை முருகன்:

பச்சைமயில் ஏறியே பறந்தோடி வருவானேஉச்சிமலை முருகனை உருகியே அழைத்தாலே பச்சைநிற வள்ளிதன் காதல் மணாளனாம்வச்சிரம் ஏந்திய வாசவன் மருகனாம் பச்சை திருமேனி பரந்தாமன் மருகனாம்அச்சது பொடிசெய்த ஆனைமுகன் தம்பியாம்சச்சிதானந்தனின் சுந்தர குமாரனாம்இச்சைகளை அறிந்து இன்னருள் புரிபவனாம்

முருகன்

அருள்மிகு வேலன்:

பாரினிலே கண்டதில்லை யாரிடமும் கேட்டதில்லைவாரித்தரும் வள்ளலான வேலனைப்போல் வேறொருவர் மாரிதரும் நீர் போலே மக்கள் மனம் குளிரகோரிடும் வரமெல்லாம் கொடுத்து மகிழ்வானே பரமனின் மைந்தனாம் பார்வதி பாலனாம்சுரர்களை காத்திடவே சூரனை வென்றவனாம்சரவணபவ குகனை சண்முகசுந்தரனைசரண்புகுந்தாலே சகலமும் தருவானே

முருகன்

அருள்மிகு ஆறுமுக வேலன்:

ஆலோசனை ஏனோ ஆறுமுக வேலா உன்காலைப் பிடித்திருக்கும் பாலன் எனக்கருள மாலோலன் மருகனே மந்திரப் பொருளோனேசூலபாணி மகிழ் சுந்தர குமாரனே காலனை உதைத்த கண்ணுதற் கடவுளைபட்டருக்கருளிய பரமேஸ்வரியைஆனைக்கு ஓடிய ஆராவமுதனைவேலாநீ அறியாயோ காலத்தே வருவாயே

முருகன்

அருள்மிகு செந்தூர் முருகன்:

அலைவாயுகந்த ஆறுமுகவேலவனைதலைமுறை தோறுமே தாள் பணிவோமே அலைமகள் உடனுறை அரங்கனின் மருகனாம்கலைப்பிறை சூடிய சுந்தரன் மைந்தனாம் அலைகடலாடியே ஆலயம் வலம்வந்துமலைமகள் மைந்தனை மனமுருகித் தொழுதுஇலை நீறணிந்தாலே இனிதே நீங்கிடுமேதலைமுதல் கால்வரை தாக்கிடும் பிணிகளுமே

முருகன்

அருள்மிகு கதிர்வேல் முருகன்:

கிரிமகள் மைந்தனே கந்தனே சுந்தரனேகரிமுகன் சோதரனே காத்தருள் புரிவாயே கிரிதரன் மருகனே கார்த்திகேயனேபுரிசடை பரமனின் புதல்வனே குகனே கிரிதனை தகர்த்த கங்கை பாலனேஅரிமுகனை அழித்த ஆறுமுக வேலவனேவரிவளை அணிந்த வள்ளி மணாளனேகரிமகள் கரம்பிடித்த கதிர்வேல் முருகனே

முருகன்

அருள்மிகு வேலன்:

வெட்சி மலர் சூடும் வேலனே முருகாரட்சித்தருள்வாயே ரஞ்சனி மைந்தனே தட்சிணாமூர்த்திதன் தனயனே குகனேதேவர்களை காத்த குஞ்சரி பாகனே தாரகனை வதைத்த தீரனே வீரனேகீரனுக்கருளிய கார்த்திகை பாலனேசீரலைவாய் உறை சண்முகசுந்தரனேஆரமுதே உந்தன் அடிமலர் பணிந்தேனே