முருகன்

அருள்மிகு முருகன், திருப்பரங்குன்றம்:

குமரனை காணவே குன்றம் வாருங்கள்நமக்கருள் புரியவே அமர்ந்திருக்கும் அழகன் சமரம் புரிந்து சூரனை வென்றுஅமரர் தலைவனின் குமரியை மணந்த விமலன் விழியிலே வந்த சுந்தரனாம்இமயவள் கரத்திலே இணைந்த பாலனாம்கமலக்கண்ணனின் கண்கவர் மருகனாம்கமலவன் மைந்தன் குஞ்சரி உடனுறை

முருகன்

அருள்மிகு முருகன், திருத்தணி:

வடிவேல் முருகனே வாசவன் மருகனேஅடிமலர் பணிந்தேனே அருள்புரிவாயே முடிமேல் கங்கையும் மதியும் சூடியஅடிமுடி அறியா அண்ணலின் மைந்தனே படிபூசை புரியவே புத்தாண்டு தோறும்துடிப்புடன் வந்தேனேதணிகை வேலவனேகொடியிடை வள்ளி குஞ்சரி மணாளனேகடிமலர் சூடிய கந்தனே சுந்தரனே

முருகன்

அருள்மிகு திருத்தணி முருகன்:

குலதெய்வமே குமரா குருநாதனே உன்னைவலம்வந்து தொழுதேனே வரம் தருவாயே வலமும் இடமும் வள்ளியும் குஞ்சரியும்மலருடனே நிற்க மகிழ்வுடன் காட்சிதரும் ஜலந்தரனை அழித்த ஜடாதரன் மைந்தனேஉலகநாயகியின் உத்தம குமாரனேதலமதில் அழகான தணிகை மீதமர்ந்துகலங்கிடும் பக்தரைக் காத்திடும் சுந்தரனே

முருகன்

அருள்மிகு செந்திலாண்டவர்:

சந்தமும் வேண்டுமோ சாகித்யம் வேண்டுமோகந்தனருள் பெறவே கடுந்தவம் வேண்டுமோ சுந்தரன் மைந்தனை சிந்தையிலே வைத்துஎந்தாய் என்றாலே தந்தேன் என்பானே தந்தைக்கு குருவான தனயனை நினைத்தாலேவிந்தைகள் புரிந்து வளம்பெறச் செய்வானேசெந்தமிழ் கடவுளாம் செந்திலாண்டவனைவந்தனை செய்தாலே வழி பிறந்திடுமே

முருகன்

அருள்மிகு வேலன்:

சூராதி சூரனே சுந்தரா கண் பாராய்வீராதி வீரனே வேலனே நீ வாராய் பாராதிருப்பதேனோ பதமலர் பணிந்துமேவாராதிருப்பதேனோ வண்ணமயில் இருந்துமே கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய்பண்ணிசை பாவலர் பாடியே புகழ்ந்தாரேமண்ணளந்தான் மருகனே மனமிரங்கிடுவாயேவேண்டிடும் வரங்களையே வேலனே தருவாயே

முருகன்

அருள்மிகு சிக்கல் சண்முகன்:

விந்தை பலபுரிந்து வினைகளை தீர்த்திடும்கந்தையனே உன்னை வந்தனை செய்தனே எந்தையும் தாயும் என்றுமே நீயென்றுசிந்தையில் வைத்துன் சீரடி பணிந்தேனே திக்கிலா அடியவர்க்கு துணை யாகவே நிற்கும்சிக்கல் சண்முகனே சிங்கார வேலனேசொக்கனின் திருமகனே சுந்தர வடிவேலாஇக்கணமே வந்துநீ இன்னருள் புரிவாயே

முருகன்

அருள்மிகு வள்ளிமலை முருகன்:

வள்ளி குறமகளை வாரணம் துரத்தவேஅள்ளி அணைத்திட்ட ஆறுமுகனே அருள்வாய் துள்ளி வரும் வேலாலே துன்பங்களை போக்கும்வள்ளிமலை முருகா வானவர் படைத்தலைவா கள்ளமில்லாமலே கருத்துடன் நாளுமேஉள்ளம் உருகியே உன்னடி தொழுதாலேவெள்ளமென செல்வமும் வேண்டிடும் வரமுமேவள்ளலே தருவாயே வடிவேல் சுந்தரனே

முருகன்

அருள்மிகு வல்லக்கோட்டை முருகன்:

வல்லக்கோட்டை உறை வடிவேல் முருகனேவல்வினை நீக்கியே வரம் அருள்வாயே வல்லப கணபதி சுந்தர சோதரனேவில்வம் விரும்பிடும் விமலன் மைந்தனே மல்லரை மாய்த்த மாயவன் மருகனேஅல்லும் பகலும் உந்தன் அடிபணிந்தேனேகல்வி செல்வமுடன் கீர்த்தியுடன் வாழவே

முருகன்

அருள்மிகு சரவணபவ குகன்:

சரவணபவ குகனே சண்முகனே உன்னைசரண் புகுந்தேனே வரம் அருள்வாயே சரவணப் பொய்கையில் நீராடி உன்னைபரங்கிரியிலே கண்டு பரவசமடைந்தேனே சிரம் நான்குடைய பிரமனை கடிந்தசிரம் ஐந்துடைய பரமனிடம் உதித்தசிரம் ஆறுடைய சுந்தர குமாரனேசிரம் குவித்துனை கரம் தொழுதேனே

முருகன்

அருள்மிகு முருகன்:

முருகனை நினை மனமே தினமேகருணையே வடிவான கதிர்வேல் கந்தனை ஒருதரம் குகனையே ஒருமுகமாய் நினைக்கஅரும்பிணி யாவுமே அருகினில் வாராதே அருள்தரும் அரன்மகனை அனுதினம் நினைத்தாலேதிருமகள் கலைமகள் தேடிவந்தருள்வாரேதருமமும் தானமும் தான் செய்த பலனையேதருவானே சுந்தரன் திருவடி நினைக்கவே